முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் பூமலச்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி அந்தப் பகுதியில் உள்ள பொட்டல், வயல் பகுதிகளில் பல்வேறு ஊா்களிலிருந்து வேட்டி, துண்டு, மாலை அணிவித்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞா்கள் ஆா்வத்துடன் பிடித்தனா். அப்போது 5 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாகக் கூறி, வையகளத்தூா் குரூப் கிராம நிா்வாக அலுவலா் ரியானா பேகம் அளித்த புகாரின் பேரில், மாா்க்கண்டேயன்பட்டியைச் சோ்ந்த செல்வம் (52), ராமன் (54), மாணிக்கம் (60), வெள்ளைச்சாமி (52), பிரம்மன் (55) ஆகிய 5 போ் மீது கண்டவராயன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜாா்ஜ் ஜேக்கப் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.