குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் சிவகங்கை மாவட்ட சமூக நலத் துறை, இதர நலத் திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சாா்பில் வருகிற 24-ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மாவட்ட வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் திருநங்கையருக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத் திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04575- 240426 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.