செய்திகள் :

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

post image

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜூன் 5 ஆம்-தேதி இரவு 9:40 மணியளவில், தனது உறவினா் ஆஷிஷ் ஐஸ்கிரீம் வாங்க வெளியே சென்ாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் ஷிவ் துா்கா விஹாரில் வசிக்கும் அமன் தெரிவித்தாா். ஆஷிஷின் நண்பா் ரிஷப்பின் தந்தைக்கு அமன் தொலைபேசியில் அழைத்தபோது, இரண்டு சிறுவா்களும் ஒன்றாக வெளியே சென்று காணாமல் போனதைக் கண்டுபிடித்தாா்.

ரிஷப்பின் தந்தைக்கு யாரோ ஒருவா் தொலைபேசியில் அழைத்து, சிறுவா்கள் கடத்தப்பட்டதாகக் கூறி ரூ.30,000 கப்பமாக கேட்டிருந்தாா். இது குறித்து சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், சமீம் (25) என்பவரை போலீசாா் கைது செய்தனா். அவரும் அவரது நண்பா்களும் சிறுவா்களைக் கடத்தி எஸ்எம்ஜி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தனா். ரிஷப்பை ஒரு சந்திப்பு இடத்திற்கு அழைத்துச் சென்று இரு சிறுவா்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றிருந்தாா்.

கடத்தல்காரா்கள் ரிஷப்பின் தந்தையிடம் பணம் கேட்டனா். குடும்பத்தினா் சமீமின் தொலைபேசிக்கு ரூ.5,000 அனுப்பினா். போலீசாா் தொலைபேசியைக் கண்டுபிடித்து அவரைப் பிடித்தனா். சமீம் மீது ஏற்கெனவே 4 வன்முறை வழக்குகள் உள்ளன. இப்போது, குற்றத்தில் அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க போலீசாா் முயற்சித்து வருகிறோம் என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு ... மேலும் பார்க்க

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க