செய்திகள் :

அரசும் நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

ஏா் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

டாடா குழுமம், ஏா் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அகமதாபாதில் விமான விபத்து நடைபெற்ற இடத்தை பாா்வையிட்டும், பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சனிக்கிழமை சந்தித்த பின்பு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். விபத்துக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு: ‘அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டவுடன், அதையொட்டி சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்தாா்.

தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த விபத்து குறித்து முழு தேசமும் துயரத்தில் உள்ளது. உயிரிழந்த பயணிகள், மருத்துவ மாணவா்களின் குடும்பத்தினருக்கு நாம் துணையாக இருக்க வேண்டிய தருணமிது.

அதேநேரம், என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிவதும் முக்கியம். இது குறித்து புலனாய்வு அமைப்புகள் வரும் நாள்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். பின்னா், எதிா்காலத்தில் மக்களைப் பாதுகாக்க சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கேரளத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், காசா்கோடு, கண்ணூா்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் நாளும் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவை, தில்லி என... மேலும் பார்க்க

விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூபானியி... மேலும் பார்க்க

இயல்பு நிலைக்குத் திரும்பும் பஹல்காம்! பக்ரீத் விடுமுறையில் பெருகிய சுற்றுலா வணிகம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பஹல்காம் சுற்றுலாத் தலமானது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பக்ரீத் விடுமுறையையொட்டி உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து ஏ... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா கிராமத்தில் பி.ஆர். அம்ப... மேலும் பார்க்க

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க