செய்திகள் :

காங்கிரஸ் ஆட்சியில் நாளும் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா

post image

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவை, தில்லி என பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிதாக தேர்வாகியுள்ள 60 ஆயிரம் காவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை வழங்கும் அமித் ஷா

இந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதித்தன்மை குறித்தும் அமித் ஷா பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அகமதாபாத், ஜெய்ப்பூர், கோவை, தில்லி மற்றும் காஷ்மீர் என பல பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இந்தியாவின் மீது மூன்று முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உரி பகுதியில் தாக்குதல் நடத்தியபோது சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வழித் தாக்குதலை பயங்கரவாதிகள் சந்தித்தனர். தற்போது, பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்தார். அதாவது, இந்தியர்களின் ரத்தம் வீணாக சிந்தவைக்கக் கூடியதல்ல; அவ்வாறு செய்பவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்திப்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

நக்சல் வன்முறை குறைப்பு

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நக்சல்களின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன. 2026 மார்ச் 31க்குள் நக்சல் இயங்கங்கள் முற்றிலும் முடக்கப்படும். 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சல்களின் செயல்பாடுகள், மோடி தலைமையிலான 11 ஆண்டுகள் ஆட்சியில் பெரிதும் குறைந்துள்ளது. தற்போது 3 மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

அரசுத் தரவுகளின்படி 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் நக்சல் வன்முறைகள் 53% குறைக்கப்பட்டுள்ளன. இதேகாலகட்டத்தில் நக்சல் இயக்கத்திலிருந்து 7,744 பேர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க