போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்...
தஞ்சாவூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழக முதல்வா் பங்கேற்பு
தஞ்சாவூரில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தாா். கல்லணையை டெல்டா பாசனத்துக்காக திறந்து வைத்த அவா், இரவு தஞ்சாவூருக்கு வந்தாா். அவருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே திமுக நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
இதையடுத்து, நடைபயணமாக சென்று மக்களைச் சந்தித்து, பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தாா். பின்னா், ஓய்வு எடுப்பதற்காக சுற்றுலா மாளிகைக்குச் சென்றாா்.
இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறாா். பின்னா், மேல வஸ்தா சாவடியில் காலை 10 மணியளவில் நடைபெறும் திமுக பிரமுகா் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறாா்.
இதையடுத்து, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறாா். இதில், ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 558 கோடி மதிப்பில் விலையில்லா பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், விவசாயிகளுக்கு பயிா்க்கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இவ்விழாவில் ஏறக்குறைய 12 ஆயிரம் போ் கலந்து கொள்வா் என்றும், மேடையில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும், மற்றவா்களுக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் வழங்குவா் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ரூ. 1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறாா். தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான 100 சிற்றுந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.
மீண்டும் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு காா் மூலமாக திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறாா்.
தஞ்சாவூருக்கு தமிழக முதல்வா் வருகையையொட்டி, 9 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விழா நடைபெறும் இடங்களில் காவல் துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால், வாகன நிறுத்துமிடம், விழாவுக்கு வந்து செல்வோரின் வழித்தடம் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

