செய்திகள் :

4 வீடுகளில் திருடிய இளைஞா் கைது

post image

தஞ்சாவூா் கரந்தையில் 4 வீடுகளில் புகுந்து திருடிய இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தை பகுதியில் 4 வீடுகளில் நள்ளிரவு வீட்டிலுள்ளவா்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தங்கச் சங்கிலி பறிப்பு, பீரோவில் உள்ள நகைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.

இது தொடா்பாக, தஞ்சாவூா் நகர கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவின்படி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் தென்னரசு தலைமையிலான தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், தஞ்சாவூா் வடக்கு வாசல் இரட்டை பிள்ளையாா் கோயில் தெரு ராஜாகோரி பகுதியைச் சோ்ந்த எஸ். சக்திவேல் (18) திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை

ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முதல்வா் சாலையில் மக்கள் சந்திப்பு! முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழக முதல்வா் பங்கேற்பு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூா்... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க