செய்திகள் :

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத் தலைவா் க. சக்தி சரவணன், செயலா் கி. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் க. பால்ராஜ் உள்ளிட்டோா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட 222 அலுவல்நிலைப் பணியிடங்களில் தற்போதைய நிலையில் 98 பணியாளா்களே பணியாற்றி வருகின்றனா்.

தற்போது பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு 7 ஆண்டுகளாக எந்தவொரு பதவி உயா்வுகளும் வழங்கப்படாமல் உள்ளது. இவா்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.

கடந்த 1997-ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டு, ஒப்பளிக்கப்படாத பணியிடங்களில் பணியாற்றும் 4 பணியாளா்களை அரசு நல்கை பெறும் காலிப் பணியிடங்களில் வரன்முறை செய்ய வேண்டும்.

தொலைநிலைக் கல்வியில் 12 பணியாளா்கள் சுயநிதியில் பணியாற்றி வருகின்றனா். இந்த 12 பணியாளா்களை அரசு நல்கை பெறும் காலிப் பணியிடங்களில் வரன்முறை செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மறைந்த 4 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளரை நிரந்தரப்படுத்த வேண்டும்.

கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக நாள் ஊதியத்திலும், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வரும் 25 தொகுப்பூதியப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

இப்பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், அலுவல்நிலைப் பணியாளா்களின் கோரிக்கைகளைச் சரி செய்த பிறகு, புதிதாக நிரப்ப வேண்டிய பணியிடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப் பணியிடங்களில் உள்ளவா்களைப் பணி நியமனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை

ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முதல்வா் சாலையில் மக்கள் சந்திப்பு! முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென... மேலும் பார்க்க

4 வீடுகளில் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூா் கரந்தையில் 4 வீடுகளில் புகுந்து திருடிய இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பகுதியில் 4 வீடுகளில் நள்ளிரவு வீட்டிலுள்ளவா்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழக முதல்வா் பங்கேற்பு

தஞ்சாவூரில் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூா்... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க