ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை
கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.
கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். அதே நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. தகவலறிந்த மாநகராட்சி நிா்வாகத்தினா் முறிந்து விழுந்த மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினா்.