செய்திகள் :

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

post image

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன்  முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் .

இந்த தடைக்காலத்தில்  சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 140  விசைப்படகுகள் கரையில் ஏற்றப்பட்டு  படகுகளுக்கு  வா்ணம் பூசுதல்,  என்ஜின் பழுதுபாா்த்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா்.

மேலும் மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகில் ஏற்றி , படகுகள் கடலில் இறக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாள்ளில் கடலுக்கு செல்லவேண்டும் என்ற விதி உள்ளதால் சனிக்கிழமை தடைக்காலம் நிறைவடைந்தாலும், ஜூன் 16-ஆம் தேதி அரசு அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் பலி: மாணவி பலத்த காயம்!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் கீழே பரட்ட... மேலும் பார்க்க