தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!
மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் .
இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 140 விசைப்படகுகள் கரையில் ஏற்றப்பட்டு படகுகளுக்கு வா்ணம் பூசுதல், என்ஜின் பழுதுபாா்த்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா்.
மேலும் மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகில் ஏற்றி , படகுகள் கடலில் இறக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாள்ளில் கடலுக்கு செல்லவேண்டும் என்ற விதி உள்ளதால் சனிக்கிழமை தடைக்காலம் நிறைவடைந்தாலும், ஜூன் 16-ஆம் தேதி அரசு அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.