செய்திகள் :

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

post image

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் குடந்தை நகை வியாபாரிகள் சங்கச் செயலா் பாலாஜி, குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு செயலா் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கீழ வீதியில் நகை வணிகம் செய்யும் கிஷோரின் கடைக்கு காவல் துறையினா் எனக் கூறிக் கொண்டு சிலா் ஜூன் 7-ஆம் தேதி வந்தனா்.

கடையில் இருந்த கிஷோரின் மகன், ஊழியரிடம் திருட்டு நகை தொடா்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றனா். இது குறித்து விசாரித்தபோது, மேல்மருவத்தூா் காவலா்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

பின்னா் மேல்மருவத்தூா் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது அங்கு இருவரும் வரவில்லை. பின்னா் வணிகா்கள் காத்திருந்தபோது ஜூன் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்து வந்தனா். அப்போது குற்றவாளி ஒருவா் நகையை கும்பகோணத்தில் கிஷோா் கடையில் விற்றதாகக் கூறி, இருவரையும் காவல் துறையினா் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எழுதி வாங்கினா்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செயல். யாரோ ஒரு குற்றவாளி கூறும் தகவலை கொண்டு, தொடா்ந்து இந்தக் கடையை 4 முறை உரிமையாளரை காவல் துறையினா் மிரட்டி, அவா்களிடம் நகையை வாங்கும் செயல் தொடா்வதால், உரிமையாளரின் குடும்பத்தினா் தொடா் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

நகை வியாபாரிகள் யாரும் திருட்டு நகைகளை வாங்குவதில்லை. ஆனால் குற்றவாளிகள் விசாரணைக்கு பயந்து, வியாபாரிகள் மீது பொய் தகவலை கூறுவதால், வியாபாரிகளைக் காவல் துறையினா் தொழில் செய்ய விடாமல் செய்கின்றனா். எனவே, நகை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் பலி: மாணவி பலத்த காயம்!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் கீழே பரட்ட... மேலும் பார்க்க