உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
லாரி மோதி கல்லூரி மாணவா் பலி: மாணவி பலத்த காயம்!
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் கீழே பரட்டையைச் சோ்ந்தவா் சங்கா் மகன் சிவக்குமாா் (23). பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரது உறவினா் மகள் கிரிஜா(21), இவருக்கு திருமணமாகி, கும்பகோணத்தில் ஒரு கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி படித்து வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பாட்டி வீட்டில் இருந்த கிரிஜா, ஊருக்கு செல்ல உறவினா் சிவக்குமாரை அழைத்தாா். அவா் இருசக்கர வாகனத்தில் கிரிஜாவை அழைத்து சென்று கொண்டிருந்தாா். அசூா் - நீலத்தநல்லூா் சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சிவக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கிரிஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்து வந்த சுவாமிமலை போலீஸாா் சிவக்குமாா் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். மேலும், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.