செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

post image

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால்(56) இயக்கினார்.

இந்த நிலையில் அவரைக் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் கூறியிருப்பதாவது: “கேப்டன் சுமீத் சபர்வாலிடம் நான் பயிற்சி பெற்றவன். அவருடன் சேர்ந்து ஒரு விமானியாக நான் ‘ஃபர்ஸ்ட் ஆஃபிஸர்’ ஆக பணியாற்றிய நாள்களில் போயிங் 777 விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவர் எனக்கு அடிப்படை விஷயங்கள் பலவற்றையும் ஏராளமான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்.

அதன்பிறகு நான் ஒரு கமாண்டர் ஆக மாறினேன். ஆனால், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் சேர்ந்து பல மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் உள்ளது.

விமானப் பணியில் சிறந்து விளங்கிய விமானிகளில் அவரும் ஒருவர். பணி விதிகளை முறையாகப் பின்பற்றுபவர். எவ்வித குறுக்கு வழிகளையும் பின்பற்றாதவர்.

விமானியாக அவரது கணிப்புகளும் அவர் எடுக்கும் முடிவுகளும் சக விமானியாக எனக்கு பல நேரங்களில் ஆச்சரியத்தையளிக்கும். அப்படியிருக்கும்போது, ’விமானியின் மீது தவறு இருக்கிறது. விமானியின் தவறால் விபத்து’ என்று சொல்வது நம்பும்படியாக இல்லை” என்றார்.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க