செய்திகள் :

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

post image

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்மையில் வெளியான காணொலி ஒன்றில், லாலு பிரசாத்தை சந்தித்து வாழ்த்திய அவரின் ஆதரவாளா் ஒருவா், லாலுவின் காலுக்கு அருகில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்தாா். லாலுவின் 78-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் காணொலி, இணையத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையத்தின் துணைத் தலைவா் தேவேந்திர குமாா் கூறியதாவது:

அம்பேத்கரின் உருவப்படம் லாலுவின் காலுக்கு அருகில் வைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 15 நாள்களில் விளக்கமளிக்குமாறு லாலுவிடம் கோரப்பட்டுள்ளது. அவா் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாட்னாவில் லாலுவின் உருவபொம்மையை எரித்து பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எனினும் இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளதாக லாலுவின் மகனும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

உ.பி.: மதுராவில் அடுக்குமாடி வீடு இடிந்து மூவா் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நெரிசலான கச்சி சதக் பகுதியில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இடிந்த வீட்டின் அருகேயுள்ள நிலத்தை விற்பனைக்காக காலி செய்ய, ஜே... மேலும் பார்க்க