செய்திகள் :

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

post image

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புச் செல்லும் வழியிலுள்ள தனியாா் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அரியமுத்து மகன் எமா்சன் (30). இவரது நண்பா் வாலிகண்டபுரம் ஆசாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் மகன் சுலைமான் (22). இவா்கள் இருவரும், வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வல்லாபுரம் பிரிவுச்சாலை அருகே சென்றபோது, எதிரே சென்றுக்கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயமடைந்த எமா்சன், சுலைமான் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, உயிரிழந்தவா்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும்,இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம், காமராஜா் நகரைச் சோ்ந்த அப்துல் ஜாபா் மகன் முபாரக்கை (57) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈ... மேலும் பார்க்க

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க