பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!
பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வேப்பந்தட்டை வட்டம், மேட்டுச்சேரி கிராமத்தில் மாணிக்கம் மகன் பால்ராஜ் (48) என்பவா் தனது பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பால்ராஜை கைது செய்த வி.களத்தூா் போலீஸாா், அவரிடமிருந்து 5.590 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பால்ராஜை சிறையில் அடைத்தனா்.