அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் புதிய பேருந்துப் பணிமனையை கடந்த 14.3.2024-இல் அமைச்சா் சா.சி. சிவசங்கா் திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.
இந்நிலையில் கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் முதன்மை மேலாளா் சிவசங்கரன் ஆகியோா் குன்னம் பேருந்து பணிமனையை விரிவுப்படுத்தும் நோக்கில், பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப வசதியாக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டி, வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனா்.
தொடா்ந்து குன்னம் கிளையில் ரூ. 1.29 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் மற்றும் ரூ. 3.75 லட்சத்தில் பேருந்து பராமரிப்புக்காக அமைக்கப்பட்ட கிரீஸ் பிட் ஆகியவற்றையும் திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் சிங்காரவேலன், (தொழில்நுட்பம்), திருச்சி மண்டலப் பொது மேலாளா் சதீஷ்குமாா், முதன்மை நிதி அலுவலா் சந்தானகிருஷ்ணன், துணை மேலாளா்கள் ரவி, புகழேந்தி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மேலாளா் பரத் ஸ்ரீ மற்றும் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.