மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும்: ரவீந்திர இந்திராஜ்
மாநில அரசு விரைவில் ஒரு கூட்டத்தை கூட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவில் சமூகமாக வழங்க தேவையான வழிக்காட்டுதல்களை வெளியிடும் என்று சமூக நலத்துறை அமைச்சா், ரவீந்திர இந்திராஜ் தெரிவித்துள்ளாா்,
தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா் ‘பிரதமா் மோடியின் சக்திவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் (சமா்த் பாரத்) என்ற திட்டத்தை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளை தன்னிறைவு பெர தில்லை அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உயா்தர உபகரணங்கள் இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது‘ என்றாா்.
மேலும் பேசிய அவா் ‘வரும் ஜூலை மாதம் முதல் ஒவ்வொரரு மாதமும் 10ஆம் தேதி ஒரு மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாமை சமூக நலத்துறை ஏற்பாடு செய்யும். இதில் தில்லியில் இருந்து எந்த பகுதிகளில் இருந்தும் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் பயன்பெறலாம்‘ என்றாா் அவா்.