முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியத் தளபதிகள் உயிரிழப்பு
ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.
‘ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேல் தாக்குதலால் அபாயகரமான அளவுக்கு அணுக் கதிா்வீச்சு ஏற்படவில்லை’ என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்தது.
ஈரான் 60 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அந்த நாட்டால் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட முடியும் என்ற அச்சத்தில் இத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: ஈரானின் சுமாா் 100 நிலைகள் மீதான முதல்கட்ட தாக்குதலில் இஸ்ரேலின் 200 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், நாட்டின் மொஸாட் உளவு அமைப்பின் மூலம் ஈரானுக்குள் ட்ரோன்கள் கடத்திச் செல்லப்பட்டு, அவற்றின் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைமைத் தளபதி உயிரிழப்பு: ஈரானின் நடான்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரதான யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு முக்கிய நிலைகள் மீதும் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதில் யுரேனியம் செறிவூட்டல் கட்டமைப்பின் சில பகுதிகள் சேதமடைந்தன. மேலும், 12-க்கும் மேற்பட்ட ரேடாா் கண்காணிப்பு அமைப்புகள், மேற்கு ஈரானில் உள்ள தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி, அந்தப் படையின் ஏவுகணை திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா். சில அணுசக்தி விஞ்ஞானிகளும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனா் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐஆா்ஜிசி-யின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதை ஈரானும் உறுதிப்படுத்தியது.
பின்னணி: ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் கணிசமான அளவு கையிருப்பு உள்ள நிலையில், இன்னும் 30 சதவீதம் கூடுதலாக அதைச் செறிவூட்டினால் அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் (அணு ஆயுத எரிபொருளாக யுரேனியத்தைப் பயன்படுத்த அது 90 சதவீதம் செறிவூட்டப்பட வேண்டும்). இதனால், ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் அமெரிக்கா, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் (ரஷியா போன்ற) மூன்றாவது நாட்டுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இது, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டு, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது.
இதனிடையே, ‘ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக இரு தினங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியது.
‘2019 அணுசக்தி ஒப்பந்தத்தில், இதுவரை அறிவிக்கப்படாத அணு பொருள்கள் மற்றும் அணுசக்தி சாா்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஇஏ-வுக்கு முழுமையாகத் தெரியப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றவில்லை. எனவே, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மின்சாரம் தயாரிப்பதற்காகத்தான்; அணு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை’ என்று ஐஏஇஏ குற்றஞ்சாட்டியது.
100 ட்ரோன்கள் மூலம் ஈரான் பதிலடி
‘இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்’ என்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி எச்சரித்தாா்.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, 100-க்கும் அதிகமான ட்ரோன்களை முதல் கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏவியது. தங்கள் வான் பரப்பின் மீது இஸ்ரேலை நோக்கி ஆளில்லா விமானங்கள் பறந்து சென்றன என்று இராக்கும் ஜோா்டானும் உறுதிப்படுத்தின.
ஈரானின் ட்ரோன்களை தங்களது போா் விமானங்கள் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறினாலும், இந்தத் தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
டிரம்ப் எச்சரிக்கை: இந்தத் தாக்குதல் குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் முதல் கருத்தைப் பதிவிட்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘தனது அணுசக்தி திட்டத்தில் அமெரிக்காவுடனான உடன்பாட்டை ஈரான் காலம் கடப்பதற்கு முன்பாக விரைந்து எட்டவேண்டும். இல்லையெனில், இஸ்ரேலின் தாக்குதல் மோசமாகிவிடும். அத்தகைய படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் உள்ளது. இல்லையெனில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இத் தாக்குதல் மேலும் கொடூரமானதாக இருக்கும்’ என்று எச்சரித்துள்ளாா்.