செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

post image

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்களுக்கான உளவுத்துறையின் துணைத் தலைவர் ஜெனரல் கோலாம்ரெசா மெஹ்ரபி மற்றும் ராணுவ செயல்பாடுகளின் துணைத் தலைவர் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், அவர்கள் எப்போது? எங்கு? கொல்லப்பட்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது நேற்று (ஜூன் 13) இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இதில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. பரஸ்பர தாக்குதலில் ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் மூவரும் உயிரிழந்தனா். இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய ந... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது. காவல்துறை அமைச்சா் சென்ஸோ ஷுனு இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தாா். இது தவிர, உயிரிழப்பு எண்ணிக்க... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்... மேலும் பார்க்க

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் ப... மேலும் பார்க்க

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம்

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர், ஏராளமான கட்டங்களுக்கு கடும் ... மேலும் பார்க்க