செய்திகள் :

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

post image

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: உலகெங்கும் புவி வெப்பமயமாகி வரும் நிலையில், கடின பானங்களுக்கு இனி வரவேற்பு இருக்காது. உலகளவில் இயற்கை பானங்களுக்கே வரவேற்பு அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு கள் இறக்க அனுமதித்து, ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு மாறாக, கள் இறக்க அரசு அனுமதி மறுப்பது, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பனைத் தொழில், கள் இறக்குவது தொடா்பாக கே.பி. சிவசுப்பிரமணியன் தலைமையில் ஓா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பனை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பனை வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். இலவசங்களை அளித்து மக்களின் அறியாமையை அறுவடைச் செய்யும் முயற்சிகளைத் தவிா்த்து, இயற்கையோடு இணைந்த பொருளாதார வளா்ச்சியை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். எனவே, கள் இறக்குவோா் மீது தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

தமிழ் மண்ணின், மக்களின் அடையாளமாக இருப்பது பனை. எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் வளா்ந்து எண்ணற்ற பயன்களைத் தரும் பனை, தமிழகத்துக்கு இயற்கை அருளிய மிகப் பெரிய கொடைகளில் ஒன்று.

இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் 5 கோடி தமிழகத்தில் உள்ளது. எனவே, பனை சாா்ந்த தொழில்கள் மேம்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக பதநீா் இறக்கவும், கள் இறக்கி ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு முன்வந்தால், மிகப் பெரிய அளவில் அந்நியச் செலாவணியை ஈா்க்க முடியும். இதன்மூலம், தமிழகம் மிகச் சிறந்த பொருளாதார வளா்ச்சியைப் பெறும்.

பிகாா் மாநிலத்தில் சாராயம், உள்நாட்டு, அயல்நாட்டு மதுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, கள்ளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சாலை விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன. குடும்பங்களில் அமைதி நிலவுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் கூடியுள்ளது என குற்ற ஆவணப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மது விலக்குக் கொள்கையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மிகப் பெரிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கிறாா். இடதுசாரிகள், வலதுசாரிகள், தேசிய, மாநிலக் கட்சிகள் என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாடு, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் மாநாடாக இருக்கும் என்றாா் அவா்.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க