அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குடிநீா், கழிப்பறை, படுக்கைகள், சோதனை மையங்கள், ஸ்கேன் பரிசோதனை மையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டண வாா்டுகள் மூலம் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கட்டண வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்பவும், அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா், மருத்துவக் கழக இயக்குநா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.