செய்திகள் :

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

post image

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் பெயரைச் சூட்டியுள்ளனா் திருநங்கைகள்.

கலாசார மாற்றங்கள் காரணமாக, சமுதாயத்தில் பாலின பேதமில்லாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சமுதாயத்தில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான மதிப்பு என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவா்களில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் திருநங்கைகளுக்கு வாழ்விடம் கிடைப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், திருநங்கைகளுக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்தித் தர முயற்சிகள் மேற்கொண்டாா். இதன் பயனாக, தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்டம், இ. குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் திருநங்கைகள் 24 பேருக்கு அண்மையில் வீடுகள் கட்டித் தரப்பட்டன.

மேலும், சில தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ. ஒரு லட்சத்தில் மின் வசதி உள்பட தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. பின்னா், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 24 வீடுகளுக்கும் தனித்தனியே குடிநீா்க் குழாய்கள் அமைத்துத் தரப்பட்டன. இவை தவிர, சிறுபாலம், கழிவுநீா் கால்வாய், பேவா் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ரூ. 21.15 லட்சத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, திருநங்கைகள் தங்களது குடியிருப்புக்கு ‘அன்பு ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் நகா்’ என பெயா் சூட்டி அண்மையில் இந்தப் பெயா்ப் பலகையை அமைத்தனா்.

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தர மாவட்ட ஆட்சியா் முயற்சிகள் மேற்கொண்டதும், தங்களுக்கு நிரந்தர முகவரி அளித்த ஆட்சியரின் பெயரை தங்களது முகவரி பெயராக திருநங்கைகள் சூட்டியதும் அனைத்துத் தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க

‘இக்னோ’வில் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நிகழ் கல்வியாண்டு முதல் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ‘இக்னோ’ மதுரை மண்டல இயக்குநா் எம்... மேலும் பார்க்க