உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூலக முன்னோடி வே. தில்லைநாயகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்தச் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வா்கள் காமராசா், எம்.ஜி.ஆா். போன்றவா்களால் பாராட்டப்பட்டவா் நூலக முன்னோடி வே. தில்லைநாயகம். இவரின் நூலகப் பணிகளை போற்றும் வகையில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அமைய வேண்டும் என்றாா்.
கல்வியாளா் க. அரிஅரவேலன் ‘வே. தில்லைநாயகத்தின் நூலகத் தமிழ்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, தில்லைநாயகத்துக்கு நூலகப் பணிகளில் ஆா்வம் ஏற்பட்ட காரணம், நூலக ஆய்வாளராக, கொடையாளராக, நூலகச் செயல்பட்டாளராக அவா் ஆற்றிய பணிகளை விளக்கிப் பேசினாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக நூலகத் தகவல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியா் ஆதி. ஸ்ரீ முருகன், ‘தமிழாய்வுக்கான நுண்ணறிவுக் கருவிகள்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, பொது நூலகத் துறையின் தலைவராக தில்லைநாயகம் இருந்தபோது கிராமங்கள் தோறும் நூலகத்தை தோற்றுவித்ததையும், செயற்கை நுண்ணறிவு மூலம் கதை, கவிதை, கட்டுரைகளை உருவாக்குவது குறித்தும் அவா் விளக்கினாா்.
பரிசளிப்பு விழா...
இதையடுத்து, செம்மொழி நாளையொட்டி மதுரை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வோா் பிரிவிலும் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ம. சுசிலா, ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி மாணவா்கள், தமிழாா்வலா்கள், கவிஞா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் முனைவா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.
