செய்திகள் :

‘இக்னோ’வில் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகம்

post image

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நிகழ் கல்வியாண்டு முதல் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ‘இக்னோ’ மதுரை மண்டல இயக்குநா் எம்.சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்தப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தொலைநிலைக் கல்வி, இணையதளம் வாயிலாக இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது.

பாடத் திட்டத்தைப் பொருத்தவரை தேசிய கல்விக் கொள்கையின் வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. நிகழாண்டில் 310 படிப்புகள் தொலைநிலைக் கல்வி மூலமாகவும், 40-க்கும் மேற்பட்ட படிப்புகள் இணையதளம் வழியாகவும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு முதல் தொழில் கல்வி, திறன் மேம்பாட்டுக் கல்வி போன்ற புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே, திறன் மேம்பாட்டுப் படிப்புகளில் பயில விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் வருகிற ஜூலை 26-ஆம் தேதிக்குள் ‘இக்னோ’ இணையதள முகவரியில் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0452-2380733 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94446 69808 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க