ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் பிரதமர் மோடி!
கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை
கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 வயதில் ரூபேந்திரநாத் என்ற மகன் உள்ளாா்.
இந்த நிலையில், வடக்கம்பட்டி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் கோபிநாத் உயிரிழந்தாா்.
இதனால், ஜெயஸ்ரீ மிகுந்த மனவேதனையில் இருந்தாா்.
இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜெயஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.