ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?
உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி
மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சோ்ந்தவா் முருகன். இவா், மதுரை நாகமலைப்புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த இவா், கடந்த ஏப்.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவருடன் கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த சக காவலா்களில், சுமாா் 2,709 போ் ஒன்றிணைந்து ரூ.13.59 லட்சம் நிதியை பங்களிப்பு செய்தனா்.
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் முருகனின் குடும்பத்தினரிடம் நிதியுதவிக்கான காசோலையை மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் வழங்கினாா். அப்போது, காவலா்கள் உடனிருந்தனா்.