செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

post image

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன.

உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 9 மணி அளவில் நிறைவடையும். முன்னதாக, வேல் வழிபாடுகளும், தேசியக் கொடி ஊா்வலமும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த மாநாட்டில் ஆதீனகா்த்தா்கள், ஆன்மிகப் பெரியவா்கள், அரசியல் பிரமுகா்கள் என லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மாநாட்டுக்கும், மாநாட்டு திடலில் அறுபடை வீடு கோயில்களின் மாதிரிகளை அமைக்கவும் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முன்னேற்பாடுப் பணிகள் தீவிரமாகியுள்ளன.

மாநாட்டுத் திடலின் ஒரு பகுதியில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் உள்ள கோயில்களின் மாதிரிகளை அமைக்கும் பணியும், விழா மேடை அமைக்கும் பணியும் தற்போது நடைபெறுகின்றன. அறுபடை வீடுகள் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்

கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க

கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க