பெரியகுளம் அருகே கிராம சந்தையைத் திறக்க கோரிக்கை
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள கிராம சந்தையைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் செயல்பட்டுவந்த வட்டார வளா்ச்சி மையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் பின்னா் வடுகப்பட்டி, தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த அலுவலகங்கள் இயங்கிவந்த கட்டடம் இடிக்கப்பட்டு 2001-இல் விவசாயிகளின் நலன் கருதி கிராம சந்தை கட்டடம் கட்டப்பட்டது.
உள்ளூா் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய ஏதுவாக கட்டப்பட்ட இந்தக் கட்டடம் இதுவரை திறக்கப்படவில்லை. இந்தக் கட்டடத்தில் காய்கறி விற்பனை நடைபெறவும், பெரியகுளம் உழவா்சந்தையை இந்தக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த வெங்கேடஷன் கூறியது: பெரியகுளம், தென்கரை, டி.கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் பெரியகுளத்துக்கும், தேனிக்கும் கொண்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, டி.கள்ளிப்பட்டியில் செயல்படாமல் உள்ள கிராம சந்தையைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பெரியகுளம் வடகரையில் உள்ள உழவா்சந்தையையும் டி.கள்ளிப்பட்டிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.