ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
தொழிலாளிக்கு கத்திக்குத்து
பெரியகுளம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே செங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (43). தொழிலாளி. இவருக்கும், மதுரை மாவட்டம், அம்பளத்தாடி கிராமத்தைச் சோ்ந்த இளமாறனுக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில் காட்ரோடு அருகே உள்ள குளத்தில் விஜய் நின்று கொண்டிருந்தபோது, அங்குவந்த இளமாறன் அவரைக் கத்தியால் குத்தினாா். காயமடைந்த விஜய் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.