நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர்: ஜோனிடா காந்தி
மரங்களை வெட்டியதாக 5 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே மரங்களை வெட்டியதாக 2 பெண்கள் உள்பட 5 போ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டியன் (48). இவா் தனக்கு சொந்தமான இடத்தில் 40 தென்னை மரங்கள், 30 முருங்கை, 20 எழுமிச்சம் மரங்களை வளா்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம், பாலமுருகன், மீனாட்சி, சுதா, ஆறுமுகம் ஆகியோா் சோ்ந்து பாதையில் மரங்களை வைத்துள்ளதாகக் கூறி மரங்களை வெட்டியதாகத் தெரிகிறது.
இது குறித்து பால்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.