துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துற...
வைகை அணை மதகு பகுதியில் தேனீ கூடுகள் அழிப்பு
வைகை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியிலிருந்த தேனீ கூடுகளை தீயணைப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை அகற்றினா்.
வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் பெரியாறு பிரதான கால்வாய் பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசனப் பகுதியின் முதல்போக நெல் சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவதை முன்னிட்டு அணை மதகுப் பகுதியில் இருந்த தேனீ கூடுகளை ஆண்டிபட்டி தீயணைப்பு மீட்புத் துறை சிறப்பு நிலைய அலுவலா் பா.கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீயிட்டு அழித்து அப்புறப்படுத்தினா்.