ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை!
வீரபாண்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.
வீரபாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளித் தெரு, நாகா சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவா் சிவக்குமாா். இவரது மனைவி போதுமணி (45), தனது ஒன்றரை வயது பேரனுடன் வீட்டில் இருந்தாா்.
அப்போது முகமூடி அணிந்த 3 நபா்கள் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தும், போதுமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும் வீட்டிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்து போதுமணி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.