செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

post image

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறாா். நண்பகல் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் அவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நண்பகல் 12.20 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

அதேபோல, ஜூன் 17-ஆம் தேதி நண்பகல் 2.15 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பாதுகாப்பு கருதி, மீனம்பாக்கம் விமானம் நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் சாலை ஆகியவற்றை சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், பாரா கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள், மைக்ரோலைட் ஏா் கிராப்ட் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க