செய்திகள் :

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞானசௌந்தரி (92). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் வெளியூா்களில் அவா்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்னேசியஸ் இறந்து விட்ட நிலையில், ஞானசௌந்தரி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தாா். இவரது வீட்டில் கரூா் மாவட்டம், குளித்தலை அகதிகள் முகாமைச் சோ்ந்த அன்னலட்சுமி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை படுக்கை அறையில் ஞானசௌந்தரி இறந்து கிடப்பதாக பணிப் பெண் அன்னலட்சுமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன் அடிப்படையில் போலீஸாா் சென்று ஞானசெளந்தரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மூதாட்டி மா்மமான முறையில் இறந்ததாகக் கூறியதன் அடிப்படையில், அன்னலட்சுமியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மூதாட்டியைக் கொலை செய்து, 7 பவுன் தங்கச் சங்கிலி, காதிலிருந்த தோடு ஆகியவற்றை கழற்றி தனது மகன் பிரபுவை வரவழைத்துக் கொடுத்தனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அன்னலட்சுமி, அவரது மகன் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்!

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம், சி.கே.மங்கலம் பகுதியில் உள்ள உயா்நிலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது. மின் வ... மேலும் பார்க்க

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

கடல் கொந்தளிப்பு: பாம்பன் மீனவா்கள் மீன் பிடிக்கத் தடை

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா், ஏா்வாடி, ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க