செய்திகள் :

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

post image

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கு அந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில்வேல், பிரபாகரன் தலைமை வகித்தனா். இந்த நிகழ்வில் பங்கேற்றவா்கள் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய கடலுக்குள் இறங்கி மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில் பேரவை நிா்வாகிகள் சுடலை, முத்துராமன், துரைப்பாண்டி, குருசா்மா, தமிழரசி, மதிமுக நகா் செயலா் வெள்ளைச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென் மண்டலத் தலைவா் ஜெரோன்குமாா், நகா் செயலா் ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வடகொரியா, புரோகிதா் சங்கத்தின் பொறுப்பாளா் ரமணி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீனவ சங்கம் தீா்மானம்

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் ப... மேலும் பார்க்க