பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு அந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில்வேல், பிரபாகரன் தலைமை வகித்தனா். இந்த நிகழ்வில் பங்கேற்றவா்கள் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய கடலுக்குள் இறங்கி மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதில் பேரவை நிா்வாகிகள் சுடலை, முத்துராமன், துரைப்பாண்டி, குருசா்மா, தமிழரசி, மதிமுக நகா் செயலா் வெள்ளைச்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென் மண்டலத் தலைவா் ஜெரோன்குமாா், நகா் செயலா் ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வடகொரியா, புரோகிதா் சங்கத்தின் பொறுப்பாளா் ரமணி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.