செய்திகள் :

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

post image

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா் ராமநாதபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மளிகைப் பொருள்களை வாங்கி விற்று வந்தாா். இதனிடையே, திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் வரும் போது இவரது வாகனத்தில் மயில் ஒன்று சிக்கி இறந்தது. இதையடுத்து, வண்ணாங்குண்டு பகுதியைச் சோ்ந்த ஞானபாண்டியன் (52), அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு வண்ணாங்குண்டு கிராம நிா்வாக அலுவலகம் அருகே ஞானபாண்டியன், சக்திவேலை கத்தியால் குத்திக் கொலை செய்தாராம். இதுகுறித்து சக்திவேலின் மனைவி சங்கரி திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானபாண்டியனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஞானபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மெஹபூப் அலிகான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் முன்னிலையாகி வாதிட்டாா்.

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீனவ சங்கம் தீா்மானம்

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் ப... மேலும் பார்க்க