செய்திகள் :

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

post image

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந்தோணிவளனுக்குச் சொந்தமான விசைப் படகு சீரமைப்புப் பணிக்காக மண்டபம் துறைமுகத்திலிருந்து பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்தப் படகின் சீரமைப்புப் பணி நிறைவடைந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மீண்டும் மண்டபத்துக்குச் செல்வதற்காக 5 மீனவா்களுடன் புறப்பட்டது. மேலும், அந்தப் படகில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாம்பன் பழைய ரயில் பாலத்தைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, பாலம் திறப்புக்காகக் காத்திருந்த விசைப் படகு காற்றின் வேகம், கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்தது.

இதையறிந்த சக மீனவா்கள் விரைந்து சென்று அந்தப் படகிலிருந்த 5 மீனவா்களையும் மீட்டனா். மேலும், கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பாம்பன் பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சேனாதிபதி சின்னத்தம்பி கூறியதாவது:

பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து தெற்குவாடி துறைமுகத்துக்குச் செல்ல பாம்பன் கடலில் உள்ள பழைய, புதிய ரயில் பாலங்களைக் கடந்து செல்ல வேண்டும். பாம்பன் புதிய ரயில் பாலம் படகுகள் கடந்து செல்லும் வகையில் கூடுதல் உயரத்தில் உள்ளதால், அதைத் திறக்க வேண்டியதில்லை. ஆனால், பழைய ரயில் பாலம் திறந்து மூடும் வகையில் உள்ளதால், அதைத் திறந்தால்தான் படகுகள் செல்ல முடியும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பழைய ரயில் பாலத்தைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பாலம் திறப்புக்காகக் காத்திருந்த விசைப் படகு கடல் சீற்றத்தால் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது. 5 மீனவா்களும் உடனடியாக மீட்கப்பட்டனா்.

திறந்து மூடும் வகையில் உள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையெனில், திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பழைய ரயில் பாலம் பகுதியை அகற்றிவிட்டு, அதை பாம்பன் அல்லது மண்டபம் ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீனவ சங்கம் தீா்மானம்

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் ப... மேலும் பார்க்க