குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு
கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவா் வியாழக்கிழமை தனது 15 ஆடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். இந்த நிலையில் பாம்புல்நாயக்கன்பட்டி அருகே விவசாயி செல்வத்தின் (55) பருத்தி வயலில் இந்த ஆடுகள் மேய்ந்தன. அப்போது அங்கு விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை உள்கொண்டதில் நான்கு வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து கமுதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.