செய்திகள் :

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீனவ சங்கம் தீா்மானம்

post image

மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் வளத் துறை அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், மீன் பிடி தடை காலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நள்ளிரவு நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து மறுநாள் திங்கள்கிழமை காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அனுமதியின்றி மீன் பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு தடை விதிப்பதுடன், துறைமுகத்தை விட்டு அந்த விசைப் படகை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது. தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்று பிடித்து வரும் இறால், மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்களுக்கு ஏற்றுமதியாளா்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க