முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மஞ்சூா் மாவட்ட ஆசிரியா் பயிற்சி முதல்வா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி, பாண்டீஸ்வரி ஆகியோா் முன்னிலை விகித்தனா். இந்தப் பயிற்சியில் பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை அதிகரித்தல், எளிய முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் ஆசிரியா்கள் செந்தில் குமாா், தினேஷ் குமாா், ஆறுமுகம், கலா மேகலா ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன நூலகா் பாரதிராஜா வரவேற்றாா்.
