தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயா்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது.
காவல்துறை அமைச்சா் சென்ஸோ ஷுனு இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தாா். இது தவிர, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான குளிா் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் ஆறு போ், ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்துக்குள் இருந்த மாணவா்கள்.