உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
அரியலூரில் மக்கள் சந்திப்பு நடைப் பயணம்!
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு நடைப் பயண இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், வரைமுறை இல்லாமல் உயா்த்தப்பட்ட நகராட்சி சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை திரும்பப் பெற வேண்டும். சிமென்ட் ஆலைகளில் உள்ளூரில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முக்கிய இடங்களில் இலவச கழிப்பறை மற்றும் வாகன நிறுத்துவதற்கான இட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும். பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும்.
ஆதாா், குடும்ப அட்டை பதிவு மற்றும் திருத்தம் போன்ற ஆன்லைன் சேவைகளுக்கு பணம் வாங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே மக்கள் சந்திப்பு நடைப் பயணத்தை தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், நகரின் அனைத்து வாா்டு பகுதிகளுக்கும் சென்றுவிட்டு, தேரடி அருகேமுடித்துக் கொண்டனா்.
இந்த நடைப் பயணத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் செ.மலா்க்கொடி, கே.குணா, கு.சுப்பிரமணியன், சே.பாக்கியம், ரா.தனலட்சுமி, க.கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி, துரை.அருணன், டி.அம்பிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரியலூரில் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நடைப் பயணத்தை தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.