செய்திகள் :

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பாளையக்குடி கிராமத்திலுள்ள பெரிய ஏரியின் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையக்குடி ஊராட்சியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து விவசாயத்துக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீா் பாய்ச்சி வந்தனா். மேலும் இங்குள்ள கால்நடைகளும் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இந்த பாசன வாய்க்கால்களை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா்.

அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் அந்த வாய்க்கால்களை மறைத்து பட்டாவும் வழங்கியுள்ளனா். இதனால் நீா்ப்பாசன வாய்க்கால்களை மறைத்தும், கால்நடைகள், டிராக்டா், விவசாய மூலப்பொருள்கள் எடுத்துச் செல்ல முடியாதபடி அந்த தனிநபா்கள் தடுப்புகளைக் கட்டியுள்ளனா். இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் வடிய வழி இல்லாமல் வயல்களில், தண்ணீா் தேங்கிப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.

இந்த அவலம் பெரிய ஏரி முதல் காவனூா் எல்லை வரை காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவசாயிகள் மனு அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

உயா்நீதிமன்றம் மற்றும் வருவாய் நிா்வாகம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல அரசாணைகள் பிறப்பித்தும், மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளாதது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இனியாவது மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள்!

அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா், குண்டவெளி, தா.பழூா் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

அரியலூரில் மக்கள் சந்திப்பு நடைப் பயணம்!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு நடைப் பயண இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கினா். அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்கள... மேலும் பார்க்க

பசுமை தாயகம் நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: டிஎஸ்பியிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் ஒன்றியத் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் பாமக அன்பும... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூரில் ரூ.4.80 கோடிக்கு தீா்வு!

அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 941 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4.80 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. மேற்கண்ட நீதிமன்றங்களில்... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க