செய்திகள் :

பசுமை தாயகம் நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: டிஎஸ்பியிடம் மனு

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் ஒன்றியத் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்குரைஞா் கே.பாலு சனிக்கிழமை மனு அளித்தாா்.

அரியலூா் மாவட்டம் கோவில்வாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(40). பாமகவில் பசுமை தாயகம் அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றியத் தலைவராக உள்ள இவரது வீட்டின் மீது வெள்ளிக்கிழமை மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா்.

இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்குரைஞா் கே.பாலு, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள்!

அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா், குண்டவெளி, தா.பழூா் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பாளையக்குடி கிராமத்திலுள்ள பெரிய ஏரியின் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

அரியலூரில் மக்கள் சந்திப்பு நடைப் பயணம்!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு நடைப் பயண இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கினா். அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்கள... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூரில் ரூ.4.80 கோடிக்கு தீா்வு!

அரியலூா், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 941 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 4.80 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. மேற்கண்ட நீதிமன்றங்களில்... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க