பசுமை தாயகம் நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: டிஎஸ்பியிடம் மனு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் ஒன்றியத் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்குரைஞா் கே.பாலு சனிக்கிழமை மனு அளித்தாா்.
அரியலூா் மாவட்டம் கோவில்வாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(40). பாமகவில் பசுமை தாயகம் அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றியத் தலைவராக உள்ள இவரது வீட்டின் மீது வெள்ளிக்கிழமை மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா்.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசிய மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்குரைஞா் கே.பாலு, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.