செய்திகள் :

விமானி சுமீத் சபர்வால் தந்தையிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்!

post image

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த திருமணமாகாத விமானி சுமீத் சபர்வால், விபத்துக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான தனது தந்தையிடம் அடுத்த மாதம் முதல் வேலையைவிட்டு, முழு நேரமும் உங்களை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்திருந்த நிலையில் விமான விபத்தில் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன.

விமானத்தில் இரு விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் இருந்த நிலையில், இவா்களில் 9 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

விமானி சுமீத் சபா்வால் (56), துணை விமானி கிளைவ் குந்தா் ஆகியோா் மும்பைவாசிகள். சுமீத் 8,200 மணிநேரமும், குந்தா் 1,100 மணிநேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவா்கள்.

இந்நிலையில், திருமணமாகாத விமானிகள் சுமீத் சபர்வால் தனது தந்தையிடம் கடைசியாக பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான தந்தையை கவனித்துக்கொள்வதாக பணியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனது தந்தை புஷ்கராஜிடம் தான் அடுத்த மாதம் பணியை ராஜிநாமா செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மூத்த விமானி சுமீத் சபர்வாலின் குடும்ப நண்பர் லாண்டே கூறியதாவது:

நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன். அவர் உயிரிழந்ததை எங்களால் நம்பமுடியவில்லை. விமான விபத்து ஏற்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் சுமீத் அவரது தந்தை புஷ்கராஜிடம் பேசும்போது, விமானி பணியை ராஜிநாமா செய்விட்டு வீட்டிற்கு வந்து முழு நேரமும் உங்களை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால், அதற்குள் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது.

மகனின் இறப்பால் அவரது தந்தையால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ள புஷ்கராஜியின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பேச்சாக வருகின்றன என கூறினார்.

தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு பெயர் பெற்ற ஒரு அனுபவமிக்க 56 வயதான சுமீத் சபர்வால், 90 வயதான தனது தந்தை புஷ்கராஜியுடன் மும்பை பவாய் பகுதியில் வசித்து வந்தார். புஷ்கராஜ் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான ஊழியா்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள உருக்கமான கதைகள், சோகம் நிறைந்தவையாக உள்ளன.

விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் ம... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு ம... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ... மேலும் பார்க்க