இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்பதால், திருப்பூர், கரூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணையின் மொத்த நீர் கொள்ளவு 90 அடி என்ற நிலையில், தற்போது நீர்மட்டம் 85 அடியை தொட்டுள்ளது.
எனவே, அணையிலிருந்து உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறந்துவிடப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.