செய்திகள் :

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

post image

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று காலை திடீரென சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் பெரம்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும், 6 அடி ஆழத்திற்கு கீழ் மெட்ரோ குடிநீர் ராட்சத குழாய்கள் செல்வதால் உடனடியாக இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் மண்டலம் 6 குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பெய்த மழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர்.

இதையும் படிக்க | பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. குட... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க

உலகளாவிய சூரிய சக்தி காா் போட்டியில் சென்னை ஐஐடி குழுவின் ‘ஆக்னேயா’ காா்

உலகின் முன்னணி கண்டுபிடிப்புடன் சூரிய சக்தி காா் ரேஸ் சவாலுக்கான ‘பிரிட்ஜ்ஸ்டோன் வோ்ல்ட் சோலாா் சேலஞ்ச் 2025’ என்கிற நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையத்... மேலும் பார்க்க

சென்னையில் சதமடித்த வெய்யில்!

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கி... மேலும் பார்க்க