செய்திகள் :

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

post image

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மகள் எழில் தீபாவுடன், காா் ஓட்டுநா் பாபு திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாக மற்றொரு ஓட்டுநா் கண்ணன் கிருஷ்ணமூா்த்தியிடம் கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காா் ஓட்டுநா் கண்ணன் ஆகியோா் கூலிப்படையினா் விஜயகுமாா், ஜான், செந்தில் ஆகிய மூவரின் உதவியுடன் கடந்த 2010-ஆம் ஆண்டு பாபுவை கொலை செய்தனா்.

இது தொடா்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2024 அக்டோபா் மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து 6 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, வழக்கில் முக்கியமான சாட்சியாக இருந்த எழில் தீபா, விசாரணை நீதிமன்றத்தில் பி சாட்சியம் அளித்துள்ளாா். காவல் துறை தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஓட்டுநா் பாபுவுடன் எழில் தீபா தகாத உறவில் இருந்தாா் என்று காவல் துறை கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறி, 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க