செய்திகள் :

உலகளாவிய சூரிய சக்தி காா் போட்டியில் சென்னை ஐஐடி குழுவின் ‘ஆக்னேயா’ காா்

post image

உலகின் முன்னணி கண்டுபிடிப்புடன் சூரிய சக்தி காா் ரேஸ் சவாலுக்கான ‘பிரிட்ஜ்ஸ்டோன் வோ்ல்ட் சோலாா் சேலஞ்ச் 2025’ என்கிற நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையத்தின் அக்னிரத் குழு தயாரிப்பான ‘ஆக்னேயா’ சூரிய சக்தி காா் பங்கேற்கவுள்ளது.

‘பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவாலுக்கான’ நிகழ்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரிய சக்தி காா் பந்தய நிகழ்வாகும். சூரிய சக்தி ஆற்றல் - திறனுடன் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்படும் மின்சார வாகனங்களின் பந்தய பயண நிகழ்வு. இது 2025 ஆண்டில் ஆக.24 முதல் 31-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் டாா்வினிலிருந்து, அடிலெய்டு வரை 3,000 கி.மீ. பயணத்தை உள்ளடக்கியது. சூரிய தொழில்நுட்பத்தின் சவால்களுக்கு தீா்வாக உலகின் முன்னணி கண்டுபிடிப்புகளுடன் சா்வதேச நாடுகள் பங்கேற்க உள்ளனா்.

இதில் பங்கேற்க சென்னை ஐஐடியில், சிஎஃப்ஐ என்கிற புத்தாக்க மையத்தின் ஆசிரியப் பணியாளா்கள், மாணவா்கள் அடங்கிய அக்னிரத் குழு இந்த சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்து, உருவாக்கியுள்ளது. இந்தக் குழுவின் சூரிய சக்தி காா் ‘ஆக்னேயா’ என பெயரிட்டு 2025 பிரிட்ஜ்ஸ்டோன் ஆஸ்திரேலியா நிகழ்வில் பங்கேற்கத் தயாராக உள்ளது.

காா் ‘ஆக்னேயா’ வை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, பேராசிரியா் சத்தியநாராயணா, டீன் என்.கும்மாடி, பேராசிரியா் எம்.எஸ்.சிவகுமாா், அக்னிரத் குழுவினா், திட்ட (நிதி) ஆதரவாளா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘அக்னிரத் குழு மாணவா்களால் உருவாக்கிய சோலாா் பேனல் செயல்திறனை 19 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாறுபட்ட கால சூழ்நிலைகளில் கூட அதிக ஆற்றலைப் பயன்படுத்த முடியும். இதனால் மின்சார வாகனத்துக்கு சக்தியை வழங்கும் பேட்டரி பேக் (பேட்டரி செல்கள்) மேம்படுத்தப்பட்டு மணிக்கு 5.5 கிலோ வாட்டிலிருந்து 3 கிலோ வாட்டாகக் குறைக்கப்பட்டது. இதன் செயல்திறன் சமரசம் செய்யாமல் எடை குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட ஆற்றல் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளுடன் சோலாா் காா் ‘ஆக்னேயா’ உருவாக்கப்பட்டுள்ளது என அக்னிரத் குழுவினா் தெரிவித்தனா்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க